நுவரெலியா பெருந்தோட்ட மக்களுக்கான தபால் சேவை அணுகலை மேம்படுத்தல் பற்றிய கலந்துரையாடல்.
----------------------------------------------------------------------------
நுவரெலியா பெருந்தோட்ட மக்களுக்கான தபால் சேவை அணுகலை மேம்படுத்தல் பற்றிய கலந்துரையாடல் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.ஷாலிகா லிந்தகும்புர அவர்களின் பங்குபற்றுதலில் இடம்பெற்றது.
இலங்கை தேசிய சமாதான சபையும் நுவரெலியா மாவட்ட சிவில் அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வேலைத்திட்டத்திற்கு நுவரெலியா மாவட்ட செயலகத்தினதும்‚ தலவாக்கலை பிரதேச செயலகத்தினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தின்போது‚ பெருந்தோட்ட மக்களுக்கான தபால் சேவை பிரவேசத்தை மேம்படுத்தும் பொருட்டு மத தலைவர்கள்‚ அரச உத்தியோகத்தர்கள்‚ சிவில் அமைப்புகளின் தலைவர்கள்‚ பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கிடையேயான ஒருங்கிணைந்த திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.ஷாலிகா லிந்தகும்புர‚ இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி திரு.ஜெஹான் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









