පැවති ආපදා තත්ත්වය හෙතුවෙන් පීඩාවට පත් නුවරඑළිය දිස්ත්රික්කයේ ජනතාවගේ ජීවිත කඩිනමින් යථාවත් කිරීමට සියලු දෙනාම කැපවන්න - නුවරඑළිය දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සම සභාපති මංජුල සුරවීරආරච්චි මහතා සියලු රාජ්ය නිළධාරීන්ගෙන් ඉල්ලීමක් කරයි. සභාපති වරයා මෙම ඉල්ලීම සිදු කලේ 2025/12/24 වන දින නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පැවති විශේෂ ආපදා කමිටු රැස්වීමේදීය.
දිත්වා සුළි කුණාටුවෙන් පසුව නුවරඑළිය දිස්ත්රික්කයේ ආපදා තත්වය සහ ගතයුතු ඉදිරි ක්රියා මාර්ග, සහන සැලසීමේ කටයුතු සම්බන්ධයෙන් රාජ්ය නිලධාරීන් සමග සාකච්ඡාවක් නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලීය ආශ්චර්ය ශාලවේදී පැවැත්විණ. ආපදා තත්වයෙන් පසුව ජන ජිවිත යථාවත් කිරීම උදෙසා කෙටිකාලින මාධ්ය කාලින දිගු කාලින වැඩපිළිවෙලක අවශ්යතාවය පිලිබදව මෙහිදී සභාපතිවරයා අවධාරණය කළේය.නිවාස, සෞඛ්ය අධ්යාපන, මාර්ග, විදුලිය, පානිය ජලය, සන්නිවේදනය ආරක්ෂාව ඇතුළු ක්ෂේත්ර සම්බන්ධයෙන් මතුව ඇති ගැටළු සම්බන්ධයෙන් මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කල අතර ආපදාවෙන් පිඩාවට පත්වූවන්ට වන්දි ලබාදීම ඇතුළු ආපදා සහන ක්රියාවලිය සම්බන්ධයෙන් ද දීර්ඝ වශයෙන් සාකච්ඡාවට බදුන් විය.
මෙම සාකච්ඡාවට අධ්යාපන හා උසස් අධ්යාපන නියෝජ්ය අමාත්ය මධුර සෙනෙවිරත්න මහතා , පාර්ලිමේන්තු මන්ත්රී කේ. කලෙයිචෙල්වි මහත්මිය , නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය ඇතුළු උසස් රාජ්ය නිලධාරීන් පිරිසක් එක්ව සිටියහ.
நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் - 2025.12.24
-------------------------------------------
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்க்கையை துரிதமாக இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மஞ்ஜுள சுரவீரஆரச்சி அவர்கள் அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக்கொண்டார். தலைவர் அவர்கள் இக்கோரிக்கையை 2025.12.24 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட அனர்த்த குழுக் கூட்டத்தில் முன்வைத்தார்.
டித்வா சூறாவளியின் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் அனர்த்த நிலைமை மற்றும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நிவாரணம் வழங்கும் அலுவல்கள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலொன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் நடைபெற்றது. அனர்த்த நிலைமையின் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு குறுகியகால, மத்தியகால, நீண்டகால வேலையொழுங்குகளின் அத்தியாவசியம் பற்றி தலைவர் அவர்கள் இதன்போது வலியுறுத்தினார். வீடுகள், சுகாதாரம், கல்வி, வீதிகள், மின்சாரம், குடிநீர், தொடர்பாடல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினைகள் பற்றி இதன்போது நீண்டதாக கலந்துரையாடப்பட்டதுடன், அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கல் உள்ளிட்ட அனர்த்த நிவாரண செயற்பாடுகள் தொடர்பிலும் நீண்டதாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கே.கலைச்செல்வி அவர்களும், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



















